Saturday, October 16, 2010

ஒரு பழைய மாணவனின் உள்ளக்குமுறல்












உலகெங்கும் பல்வேறு துறைகளிலும் பட்டொளி வீசிப் பிரகாசித்துக் கொண்டிருக்கும் அன்பான பழைய மாணவர்களே, வசாவிளானில் தனது சொந்த இடத்தில் வயாவிளான் மத்திய மகா வித்தியாலயம் பாழடைந்து சிதைவடைந்து போய் காடு மண்டிக் கிடக்கிறது. முன்னைய காலங்களில் யாழ். மாவட்டத்திலேயே சிறந்ததொரு பாடசாலையாக விளங்கிய எங்கள் பாடசாலை இன்று அதன் அழகிய கல்விச் சூழலே முற்றிலும் மாறி விட்டது... பார்க்குமிடமெல்லாம் இடிந்து அரைகுறையாகவுள்ள கட்டிடங்கள், பற்றை மண்டிய புதர்களுக்கு மத்தியில் சோபையிழந்து போய் இருக்கிறாள் எங்கள் கல்வித்தாய்... பாடசாலைச் சமூகத்தின் அதி தீவிர முயற்சியால் இன்று பாதி மாணவர்களுடன் இடிந்து குறையாகவுள்ள கட்டிடத்தில் சொந்த இடத்தில் இயங்குகின்றது... எங்களின் பாடசாலை மீண்டும் புதுப் பொலிவுடன் நிமிர்ந்து நிற்பதற்கு பழைய மாணவர்களாகிய உங்களின் உதவியை எதிர்பார்த்து நிற்கிறது பாடசாலைச் சமூகம்... தயவு செய்து உங்களால் இயன்ற உதவிகளை செய்யுங்கள்... பாடசாலைக்கு நேரடியாக உதவுங்கள்... எங்களின் அதிபருடன் பேசி பிரச்சனைகளை தெளிவாக விளங்கிக் கொள்ளுங்கள்... எமது பாடசாலையின் தொலைபேசி இலக்கம் 0094 213 734 013. இந்த இலக்கத்துடன் தொடர்பினை ஏற்படுத்தி உங்கள் பாடசாலையின் இன்றைய இக்கட்டான நிலைமையினை அறிந்து கொள்ளுங்கள்... மழை வெள்ளங்கள், இட நெருக்கடிகளுக்கு மத்தியில் எங்களைப் போல கஷ்டப்படாமல் நாளை வரும் தலைமுறையாவது தனது சொந்த இடத்தில் எந்தப் பிரச்சினையில்லாமல் சுதந்திரமாகக் கல்வி கற்கட்டும்... பாடசாலையை மீள நிர்மாணிப்பதற்கு உங்கள் ஒவ்வொருவரினதும் உதவி நிச்சயமாகத் தேவை.... பல அறிஞர் பெருமக்களை உருவாக்கிய எங்கள் பாடசாலை இடிவிழுந்து எல்லாமிழந்து இருக்கிறது.. நாளை இது நிமிரும் மீள அழகொளிரும்...

அன்புடன்,
பழைய மாணவன்...

No comments:

Post a Comment