Monday, February 28, 2011

சொந்த இடத்தில் வயாவிளான் மத்திய மகா வித்தியாலயத்தின் பல்வேறு தோற்றங்கள்!


(படங்களைப் பெரிதாகப் பார்ப்பதற்கு படத்தின் மேல் மவுசை வைத்து கிளிக் செய்யவும்)









உங்களின் நேரடியான உதவியை எதிர்பார்த்துள்ள உங்களின் அன்னை!


 சொந்த இடமான வசாவிளானில் வயாவிளான் மத்திய மகா வித்தியாலயம் தற்போது மீள இயங்கி வருகின்றது. 


வளப் பற்றாக்குறைகளோடும் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பழையமாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகளின் பேராதரவோடும் சிறப்புற இயங்கி வருகின்றது. தற்போது மாணவர்கள் விசாலமான இடத்தில் சுதந்திரமாக கல்வி கற்று வருகின்றனர். 

இடிந்த மற்றும் சேதமடைந்த கட்டிடங்கள் தொடர்ச்சியாக மீள நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் உரும்பிராயில் உள்ள ஒரு காணியில் முன்னர் இயங்கி வந்தமை குறிப்பிடத்தக்கது. 

பாடசாலையின் வலுவான மீள் எழுச்சிக்கு புலத்தில் உள்ள பழைய மாணவர்களின் நேரடியான நிதி உதவியினை வேண்டி நிற்கின்றது பாடசாலைச் சமூகம்.